ஒரு மாதம் தனிமைப்படுத்தல்... பிரபல நாட்டின் பிரதமர் கடும்போக்கு நடவடிக்கை
நியூசிலாந்தில் குடியிருப்புக்குள் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால் 24 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற கடும்போக்கு விதியை அமுலுக்கு கொண்டுவர உள்ளனர்.
நியூசிலாந்தில் ஓமிக்ரான் பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் நிர்வாகம் தொடர்ந்து போராடி வருகிறது. இதனால் கடுமையான கட்டுப்பாடுகளையும் அமுலுக்கு கொண்டு வந்துள்ளது.
தற்போது கொரோனா உறுதி செய்பவர்கள் 14 நாட்களுக்கு பதிலாக 24 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற புதிய விதியை அமுலுக்கு கொண்டுவர உள்ளனர்.
ஆனால், நீண்ட நாட்கள் தனிமைப்படுத்தல் விதியால் பலன் இருக்கப் போவதில்லை எனவும், மக்கள் இதனால் சோதனைக்கு உட்படுவதை தெவிர்க்க வாய்ப்பிருப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.
சனிக்கிழமை மட்டும் புதிதாக 84 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இதில் 43 பேர்களுக்கு சமூக பரவலில் இருந்து பாதிப்பு உறுதியாகியுள்ளதும் 41 பேர்களுக்கு எல்லையில் நோய் பாதிப்பு ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது.
இதன் பின்னரே தனிமைப்படுத்தல் நடவடிக்கையை 24 நாட்கள் என பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், ஆக்லாந்து விமான நிலைய ஊழியர் ஒருவருக்கு ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்ட நிலையில்,
நாட்டில் இது சமூகப்பரவலை ஏற்படுத்தும், நாளுக்கு 1,500 பேர்கள் வரையில் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே தனிமைப்படுத்தலை நீட்டித்துள்ளனர்.