மூன்று மடங்கு ஆபத்தான ஒமிக்ரான் மாறுபாடு! ஆய்வில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்
உலகை அச்சுறுத்தி வரும் புதிய வகை ஒமிக்ரான் மாறுபாடு டெல்டா மற்றும் பீட்டா மாறுபாடுகளை விட ஆபத்தாக இருக்கும் என ஒரு ஆய்வில் வெளியானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை புரட்டிப்போட்டு வருகின்றது. சில நாடுகளில் கொரோனா தாக்கம் குறைந்து இருந்தாலும் ஐரோப்பியா, அமெரிக்க, பிரேசில் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் உச்சம் அடைந்து வருகின்றது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவின் மாறுபாடான புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனாவுக்கு 'ஒமிக்ரான்' என்று உலக சுகாதாரத்துறை பெயர்சூட்டியுள்ளது.
இதுவரை ஒமிக்ரான் தொற்று 38 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்நிலையில் தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் சமீபத்தில் நடத்திய ஆய்வில் ஓமிக்ரான் மாறுபாடு கொடிய டெல்டா போன்ற மற்ற வகைகளை விட மூன்று மடங்கு அதிகமாக நோய் தொற்றுகளை பரப்பக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
ஒருவருக்கு இந்த தொற்று தாக்குவதால் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை உறிந்துவிடும் தன்மை இதற்கு உள்ளதாக கூறப்படுகின்றது. இந்த ஆய்வின் படி நவம்பர் 27 வரை கோவிட்-19 உறுதி செய்யப்பட்ட 2.8 மில்லியன் நபர்களில் சுமார் 35,670 பேருக்கு மறுதொற்றுகள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
90 நாட்கள் இடைவெளியில் மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டால் அது மறுநோய்த்தொற்றாக கருதப்படும். இருப்பினும்,தற்போது வரை வைரஸால் மீண்டும் பாதிக்கப்பட்ட இந்த நபர்களின் தடுப்பூசி நிலை குறித்து எந்த தெளிவும் இல்லை. இது குறித்து ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.