பிரித்தானியாவை மிரட்டும் 'Omicron' மாறுபாடு! ஒரே நாளில் இவ்வளவு பாதிப்பா?
பிரித்தானியாவில் கடந்த 24 நேரத்தில் சுமார் 86 நபருக்கு புதிய வகை Omicron மாறுபாடு உறுதி செய்யபட்டுள்ளது.
உலக நாடுகளை ஒட்டுமொத்தமாக மீண்டும் பீதியில் ஆழ்த்தியுள்ளது உருமாறிய கோவிட்-19 தொற்றான Omicron.
கடந்த மாதம் 25ஆம் திகதி தென் ஆப்ரிக்க நாடுகளில் முதல் முறையாக கண்டறியப்பட்ட இந்த தொற்று மற்ற வகை தொற்றுகளை விட அதிக ஆபத்தானதாக கருதப்படுகிறது. இந்த தொற்றால் தென் ஆப்பிரிக்கா பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றது.
அந்நாட்டில் தினசரி கோவிட் பாதிப்பு இரட்டிப்பாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த நாட்டை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா போன்ற 38 நாடுகளில் Omicron வேகமாக பரவி வருகின்றது.
அந்த வகையில் Omicron பிரிட்டன் நாட்டை மிரட்டி வருகின்றது. நேற்று ஒரே நாளில் சுமார் 86 பேருக்கு கொரோனா மாறுபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே Omicron தொற்றால் 160 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது பிரிட்டனில் மொத்தமாக 246 பேருக்கு பாதிப்பு உறுதியானது.
கிட்டத்தட்ட பிரிட்டன் நாட்டில் உறுதி செய்யப்பட்ட முந்தைய Omicron பாதிப்பு எண்ணிக்கையுடன் இன்றைய ஒரு நாள் பாதிப்பு 50 சதவிகிதமாக கூடியுள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
அதுமட்டும் இல்லாமல் பாதிக்கப்பட்ட 86 பேரில் 68 பேர் இங்கிலாந்தையும் மற்றும் 18 பேர் ஸ்காட்லாந்தையும் சார்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது.