பிரித்தானியாவில் ஒரே நாளில் 101 பேருக்கு Omicron மாறுபாடு! வெளியான அதிர்ச்சி தகவல்
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 101 பேர் புதிய வகை Omicron தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 25ஆம் திகதி தென் ஆப்பிரிக்காவில் முதல் Omicron தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து ஐரோப்பிய நாடுகள், பிரித்தானியா போன்ற 40க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
அந்த வகையில் இங்கிலாந்து நாட்டில் கடந்த சில நாட்களாவே Omicron தொற்று வேகமாக பரவி வருகின்றது. நேற்று மட்டும் புதிதாக 101 பேருக்கு Omicron வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்நாட்டில் மொத்தமாக 437 பேருக்கு Omicron கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை இங்கிலாந்தில் 89 சதவீத மக்கள் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளனர். இதையடுத்து ஒமிக்ரானுக்கு எதிராக பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் பிரிட்டனில் ஒரே நாளில் புதிதாக 45,691 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்வகையில் இதன்மூலம் அங்கு கொரோனா தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,05,60,341 ஆக அதிகரித்துள்ளது.