omicron வைரஸால் இந்த நாடுகளுக்கு தான் ஆபத்து! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
உலகையே அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் குறித்து உலகசுகாதார அமைப்பு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸான omicron வைரஸ் எந்த அளவிற்கு ஆபத்தானது என்பது குறித்து எந்த ஒரு உறுதியான அறிவிப்பும் வெளியாகவில்லை.
உலக சுகாதார அமைப்பும், இந்த வைரஸ் குறித்த பாதிப்பு மற்றும் விளைவுகள் குறித்து எந்த ஒரு தெளிவான விளக்கமும் கொடுக்காமல் இருந்தது.
இந்நிலையில், தற்போது உலக சுகாதார அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் 194 உறுப்பு நாடுகளுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையில், சர்வதேச அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக omicron வைரஸ் இருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது.
இந்த வைரஸ் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. இதன் உருமாற்றத்தை கணிக்க முடியவில்லை. இதனால், தி கவனம் செலுத்த வேண்டிய மக்களுக்கு தடுப்பூசி பயன்பாட்டை விரைவுபடுத்துங்கள்.
அடிப்படை சுகாதார கட்டமைப்புகளை வலுப்படுத்துங்கள். தற்போது வரை ஒமைக்ரான் பாதிப்பால் பலியான நபர்கள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. தற்போதைய சூழலில் குறைவான அளவில் தடுப்பூசி பயன்பாட்டை கொண்டுள்ள நாடுகளுக்கு தான் ஆபத்து உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட நாடுகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக சர்வதேச விமானப் போக்குவரத்தை சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைத்து கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டியது அவசியம்.
வரும் நாட்களில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.