பாலஸ்தீன ஆர்வலர்களுக்கு இஸ்ரேலில் நடந்ததென்ன? விசாரணைக்கு ஆணையிட்ட பிரான்ஸ்
சமீபத்தில் காஸாவுக்கு சென்ற ஆர்வலர் கப்பல் குழுவில் இடம்பெற்றிருந்த பிரெஞ்சு நாட்டவர் இஸ்ரேலில் நடத்தப்பட்ட விதம் குறித்து விசாரிக்குமாறு அரசு சட்டத்தரணிகளிடம் பிரான்ஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
குற்றச் செயல்களாக
இந்த விவகாரம் தொடர்பில் பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் தெரிவிக்கையில், துருக்கியில் உள்ள நமது தூதரகத் தலைமை அதிகாரியிடம் நான் கோரிய அறிக்கையின் அடிப்படையில்,

பிரெஞ்சு நாட்டினர் மீதான பாலியல் வன்முறை, அடித்துத் துன்புறுத்துதல் மற்றும் தொடர்ச்சியான அவமானப்படுத்துதல் ஆகியவை குறித்து அவர் எனக்குத் தெரிவித்ததால், இந்தச் செயல்கள் அனைத்தும் குற்றச் செயல்களாக அமையக்கூடும் என்பதால்,
இந்த விடயத்தை அரசு சட்டத்தரணிகளிடம் கொண்டு செல்ல முடிவு செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காஸா மக்களுக்கு உதவிப் பொருட்களைக் கொண்டு செல்லும் முயற்சியின்போது கடந்த வாரம் இஸ்ரேல் படைகளால் முற்றுகையிடப்பட்ட கப்பல் குழுவின் அமைப்பாளர்கள், ஆர்வலர்கள் துன்புறுத்தப்பட்டதாகவும், பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும்,
குறைந்தது 15 பேர் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட அத்துமீறல்களுக்கு ஆளானதாகப் புகார் அளித்ததாகவும் தெரிவித்தனர்.

கிரேட்டா தன்பெர்க்
அவர்கள் அனைவரையும் இஸ்ரேல் அரசாங்கம் விடுவித்திருந்தது. இதனிடையே, பிரெஞ்சு கப்பல் குழு ஆர்வலர்களின் சட்டத்தரணிகள், தங்கள் கட்சிக்காரர்கள் அனுபவித்த அவமானம், பாலியல் வன்கொடுமை மற்றும் சித்திரவதைகள் உள்ளிட்ட வன்முறைச் செயல்கள் குறித்து தனியாக ஒரு புகார் அளிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இவ்விவகாரம் குறித்து விவாதிக்க, பாரோட் அமைச்சரவை விடுத்த அழைப்பை அவர்கள் நிராகரித்தனர். அவர்கள் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், அமைச்சரின் அறிவிப்புகளால் எழுந்த பரபரப்பு, இனப்படுகொலையின் தொடக்கத்திலிருந்தே பிரெஞ்சு அரசாங்கம் இஸ்ரேல் அரசுக்கு ஆதரவளித்து வருகிறது என்பதை நாங்கள் மறந்துவிடப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் ஸ்வீடனின் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் ஆகியோர் சென்ற படகுகளையும் இஸ்ரேல் இராணுவம் முற்றுகையிட்டதுடன், தன்பெர்க் உள்ளிட்ட பெண்களிடம் அத்துமீறியதும், துன்புறுத்தியதும் செய்தி ஊடகங்களில் வெளியாகி, அந்த சில நாட்கள் மட்டும் விவாதிக்கப்பட்டு, பின்னர் அது மறக்கடிக்கப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |