லண்டனில் 16 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கொலை: புத்தாண்டு விழாவில் ஏற்பட்ட சோகம்
பிரித்தானியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 16 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
புத்தாண்டு விழாவில் சோகம்
லண்டனில் ப்ரிம்ரோஸ் மலை(Primrose Hill) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு புத்தாண்டு வருகைக்காக அனைவரும் காத்து இருந்த அந்த வேளையில், 16 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பொலிஸாருக்கு இரவு 11.40 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்தனர்.
ஆம்புலன்ஸ் குழுவினர் வரும் வரை சிறுவனுக்கு தேவையான முதலுதவி சிகிச்சைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
ஆனால் துரதிஷ்டவசமாக சிறுவன் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு சிறப்பு பொலிஸ் அதிகாரிகள் ஆறுதல் வழங்கி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |