ஒரே நாளில் பாடசாலை படிப்பை முடித்து சான்றிதழ் தரும் நாடு! புதிய திட்டம் அறிமுகம்
சுற்றுலாப் பயணிகளுக்காக ஒரே நாளில் பாடசாலை படிப்பை முடித்து சான்றிதழ் தரும் திட்டத்தை ஜப்பான் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒருநாள் மாணவர்
ஜப்பான் அரசு சுற்றுலாப் பயணிகளுக்காக "ஒருநாள் மாணவர்" என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தத் திட்டத்தின் கீழ் உள்ளூர் பாடசாலையில் மாணவராக ஒருநாளைக் கழிக்கலாம்.
சிபா ப்ரிபெக்சரில் உள்ள பழைய பாடசாலையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. 30,000 யென் மூலம் இந்தத் திட்டத்தில் நீங்கள் ஒரே நாளில் சான்றிதழை பெறலாம்.
கற்றல் நடவடிக்கைகள்
இப்பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக கையெழுத்து, கட்டானா சண்டை, உடற்கல்வி மற்றும் பல கற்றல் நடவடிக்கைகள் போன்ற பல செயல்பாடுகளை அனுபவிக்க முடியும்.
முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியை உண்டோகயா என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |