கனடாவில் பனிச்சரிவில் சிக்கி ஒருவர் மரணம்
கனடாவில் பனிச்சரிவில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கால்கிரியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அவருடன் சேர்ந்து இன்னொருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவருக்கு பெரிதாக பாதிப்பில்லை என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் ஆணா அல்லது பெண்ணா மற்றும் அவரின் வயது தொடர்பான தகவல் வெளியிடப்படவில்லை.
இந்த சம்பவமானது திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் நடந்துள்ளது.
லேக் லவுஸ் பகுதியில் இந்த சம்பவம் நடந்திருந்தாலும் சரியாக பனிச்சரிவு ஏற்பட்ட இடம் குறித்து இன்னும் தெரியவில்லை.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.