கதறியழுதபடி கடலுக்கு நடுவில் மிதந்துகொண்டிருந்த குழந்தை: பதறவைக்கும் சம்பவம்
துனிசியா நாட்டில் கடலுக்கு நடுவில் தன்னந்தனியாக கதறியழுதபடி குழந்தை ஒன்று ரப்பர் மிதவை ஒன்றில் மிதந்துகொண்டிருக்கும் காட்சி ஒன்று வெளியாகி பதறவைத்துள்ளது.
துனிசியா நாட்டிலுள்ள கெலிபியா என்ற இடத்தில், கடற்கரையிலிருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் குழந்தை ஒன்று மிதந்துகொண்டிருப்பதை அறிந்த மீட்புக்குழுவினர் அந்த குழந்தையை மீட்டுள்ளனர்.
இளஞ்சிவப்பு நிற ரப்பர் மிதவை ஒன்றில் மிதந்தபடி கதறியழுதுகொண்டிருக்கும் அந்த குழந்தையை மீட்புக்குழுவினர் மீட்பதை வெளியாகியுள்ள வீடியோவில் காணாலாம்.
அந்த குழந்தையுடன் கடலில் அதன் பெற்றோர் விளையாடிக்கொண்டிருந்த நிலையில், அவர்களது கவனம் திசைதிரும்பியபோது, அந்த குழந்தை காற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.