வெளிநாட்டில் ஆசிய மாணவர் ஒருவரின் உயிரைப் பறித்த Blue Whale சவால்: அதிர்ச்சி பின்னணி
அமெரிக்காவின் Massachusetts பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு இந்திய மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பமாக, அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை செய்து கொண்டதாக
குறித்த 20 வயது இளைஞர், Blue Whale சவாலை எதிர்கொண்டு, தற்கொலை செய்து கொண்டதாகவே அதிகாரிகள் தற்போது உறுதி செய்துள்ளனர். தற்கொலை ஆட்டம் என குறிப்பிடப்படும் Blue Whale சவாலை அந்த இளைஞர் எதிர்கொண்டு வந்துள்ளார்.
ரஷ்யாவில் இருந்து உருவான இந்த Blue Whale சவால், மிக மோசமான கொடூரமான கட்டங்களை கொண்டதாகும். 50 நாட்கள் முன்னெடுக்கப்படும் இந்த சவாலானது, இறுதியில் தற்கொலையில் முடிக்கப்படுகிறது.
முதல் நாள், நள்ளிரவில் கண் விழிக்க சொல்வதும் அல்லது அவர்கள் பரிந்துரைக்கும் மிக மோசமான திரைப்படம் ஒன்றை அவர்கள் குறிப்பிடும் நேரத்தில் பார்க்க செய்வதும் சவாலாக அளிக்கப்படுகிறது.
அதன் பின்னர் மிக ஆபத்தான அல்லது மிகவும் கொடூரமான கட்டங்களை கொண்டுள்ளது இந்த Blue Whale சவால். இதன் இறுதி கட்டத்தில், அதுவரை மூளைச்சலவை செய்யப்பட்ட நபரை தற்கொலைக்கு தூண்டுவதே கடைசி சவாலாக பார்க்கப்படுகிறது.
Blue Whale சவாலுக்கு முதல் இரை
மட்டுமின்றி, இந்த சவால்களை எதிர்கொள்ளும் நபரை மிரட்டி, பயமுறுத்தி அல்லது உளவியல் ரீதியாக பணியவைத்து ஒவ்வொரு சவாலையும் முடிக்க வைக்கின்றனர்.
பொதுவாகவே நீலத் திமிங்கிலங்கள் தங்கள் எல்லைகளை சுயமாகவே மீறிச் சென்று, இறுதியில் சாவை எதிர்கொள்ளும் குணம் கொண்டவை. இதன் அடிப்படையிலேயே இந்த கொடூர சவால்களுக்கும் Blue Whale என பெயரிடப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
2019ல் முதல் முறையாக நூற்றுக்கணக்கான தற்கொலைக்கு பின்னணியில் இந்த Blue Whale சவால் உறுதி செய்யப்பட்டது. ரஷ்யாவில் தொடங்கி உக்ரைன், அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இது வியாபித்தது.
கடந்த 2015 நவம்பர் 22ம் திகதி Palenkova என்ற ரஷ்ய இளம்பெண் இணையத்தில் தமது புகைப்படம் ஒன்றை பதிவு செய்தார். குறித்த புகைப்படம் பெரும் கவனத்தை ஈர்த்த நிலையில், அடுத்த நாள் அவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியானது. இவரே Blue Whale சவாலுக்கு முதல் இரை என்றும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |