மும்பை சாம்பியன் ஆவதை இந்த ஒரு அணியால் தான் தடுக்க முடியும்! அடித்து கூறும் முன்னாள் வீரர் பிராட் ஹாக்
ஐபிஎல் தொடரில் மும்பையை அணி சாம்பியன் ஆவதை டெல்லி அணியால் தடுக்க முடியும் என்று‘Only they can knock MI off & stop them from winning sixth title அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் வழக்கம் போல் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் துவங்கியது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக போட்டி, காலவரையின்றி ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தற்போது இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19-ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த முதல் போட்டியில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதவுள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் தொடர்ந்து மிரட்டி வரும், மும்பை அணியை வீழ்த்த டெல்லியால் மட்டுமே முடியும், மும்பை அணி ஆறாவது முறை சாம்பியன் ஆவதை டெல்லி அணியால் தடுக்க முடியும் என்று அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் ரசிகரின் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர், 2021-ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரின் இரண்டாவது கட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஞாயிற்று கிழமை முதல் துவங்கவுள்ளது. என்னைப் பொறுத்தவரை இந்த ஆண்டு டெல்லி அணி பட்டத்தை வெல்லும் என்று கருதுவதாக கூறியுள்ளார்.
ஏனெனில் காயம் காரணமாக முதல் பாதியில் விளையாடமல் போன ஸ்ரேயாஸ் ஐய்யர் அணிக்கு திரும்புவது அணியை பலப்படுத்தும், அதுமட்டுமின்றி அஸ்வின் இருப்பது டெல்லி அணிக்கு மேலும் பலம் சேர்க்கும்.
இதனால் டெல்லி அணி ஸ்டீவ் ஸ்மித்தை மட்டுமே நம்பி இருக்க தேவையில்லை, டெல்லி அணியால் மட்டும் தான் மும்பை அணி சாம்பியன் ஆவதை தடுக்க முடியும், இதற்கு அடுத்தபடியாக சென்னை அணி வலுவான பலத்துடன் இருப்பதாக கூறியுள்ளார்.
குறித்த ரசிகர், இந்த முறையும் மும்பை அணி தான் சாம்பியன் ஆகும் என்று கூறப்படுகிறதே, அதன் ரகசியம் என்ன என்று கேட்ட போது, ஹாக் இந்த பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.