பாகிஸ்தானை உலுக்கிய ஆணவக் கொலைகள்! காதல் திருமணம் செய்து கொண்ட மகள்கள்.. நள்ளிரவில் தந்தை செய்த கொடூர செயல்
பாகிஸ்தானில் இரண்டு பெண்கள் தங்களது தந்தையின் விருப்பத்திற்கு மீறி காதல் திருமணம் செய்து கொண்டதால் தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம் முசாஃபர்கர் மாவட்டத்தில் வசித்து வருபவர் மன்சூர் ஹூசைன். இவருக்கு 35 வயதாகும் குர்ஷித் மை மற்றும் 19 வயதாகும் ஃபவுசியா பீபி என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் அவரது மூத்த மகள் தந்தையின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டு தனியாக வீடு எடுத்து தனது கணவருடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இதையடுத்து அவரது கடைசி மகளும் கடந்த 2020ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டு தனது சகோதரியுடன் ஒன்றாக வசித்து வருகிறார். இவ்ரகளுக்கு நான்கு மாத குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே மன்சூர் தனது மகள்கள் இருவரும் தனது விருப்பத்தை மீறி காதல் திருமணம் செய்து கொண்டதால் மகள்கள் மீது கடும் கோவத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனது மகனுடன், மகள் வசிக்கும் வீட்டிற்கு சென்ற மன்சூர் வீடு முழுவதும் தீ வைத்து அனைவரையும் எரித்துக் கொலை செய்துள்ளார்.
இந்த கொடூர சம்பவத்திற்கு பிறகு தந்தை மன்சூர் ஹூசைன் மற்றும் மகன் மஜீத் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்து காணாமல் போன இருவரையும் பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் கவுரவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.