பாகிஸ்தான் பயங்கர விபத்து.. தரையில் விழுந்து எரிந்து சாம்பலான விமானம்! கமெராவில் சிக்கிய பரபரப்பு காட்சி
பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்து சாம்பலான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Khyber Pakhtunkhwa மாகாணத்தில் உள்ள Mardan நகரத்திலே இந்த பயங்கர விபத்து நடந்துள்ளது.
வழக்கமான பயிற்சி நடவடிக்கையின் போது இந்த விபத்து நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் குறித்து பாகிஸ்தா்ன விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், விபத்துக்கான காரணத்தை விசாரிக்க உயர்மட்ட விசாரணை குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
எனினும், விமானியின் நிலை குறித்து பாகிஸ்தான் விமானப்படை எந்தவித தகவலையும் வெளியிடவில்லை.
இதனிடையே, விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த விமானி மரணமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
கடந்த ஆகஸ்ட் 6 திகதி Attock அருகே வழக்கமான பயிற்சி நடவடிக்கையின் போது பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான விமான் விபத்துக்குள்ளானது.
எனினும், இரண்டு விமானிகளும் வெற்றிகரமாக விமானத்திலிருந்து வெளியேறி உயிர்தப்பினர், விபத்துக்கான காரணத்தை விசாரிக்க விசாரணை குழுவுக்கு உத்தரவிடப்பட்டது நினைவுக்கூரத்தக்கது.