இனி ஊசி போட்டால் வலிக்காது! ஏன் தெரியுமா? பிரபல நாட்டின் அசத்தல் கண்டுபிடிப்பு
நெதர்லாந்தில் ஊசி போட்டால் வலிக்காமல் இருக்க லேசர் ஒன்றை அந்நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் ஊசிக்கு பயப்படுவதுண்டு. இதனால் இவர்களை மையப்படுத்தி பிரபல நாட்டின் விஞ்ஞானிகள் பிரத்தியேக ஊசியை கண்டுபிடித்துள்ளனர்.
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமிரா நகரை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நீடில் இல்லாத ஊசியை வடிவமைத்துள்ளனர். இந்த ஊசி மூலம் வலியில்லாமல் இந்த மருந்தை உடலில் செலுத்தி கொள்ளலாம்.
நீடில் இல்லாத இந்த ஊசியில் ஒரு சிறிய லேசர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் வழியாக உடலில் மருந்தை நொடி நேரத்தில் செலுத்தப்படுகிறது.
மேலும் நோயாளிகள் மீது சீரிஞ்சில் ஏற்றப்படும் மருந்தினை தெளிக்கும் போது ஏற்கனவே மில்லி செகண்டில் சூடாகி நீர்குமிழியாக மாறியிருக்கும் அந்த மருந்து மனிதர்களின் தோலில் உள்ள நுண் துவாரங்களின் வழியாக உடலுக்குள் சென்று செயலாற்றும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பு இன்னும் 3 ஆண்டுகளில் பொது பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது. இந்த நீடில் இல்லாத லேசர் ஊசி பயன்படுத்துவதால் எந்தவித வலியும் இருக்காது என்பதால் எதிர்காலத்தில் மக்கள் இந்த ஊசியை விரும்புவார்கள் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.