பிரித்தானியாவில் தமிழர் கொலை வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொண்ட பாகிஸ்தானியர்
பிரித்தானியாவில் பாகிஸ்தானை பூர்விகமாகக் கொண்ட ஒருவர், இந்திய உணவகம் ஒன்றில் பணிபுரிந்த தமிழர் ஒருவரை கொலை செய்தது தொடர்பாக குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
தமிழ்நாட்டின் கோவையில் இருந்து வந்த விக்னேஷ் பட்டாபி ராமன் என்ற 36 வயதுடையவர், வேல் தென்னிந்திய உணவகத்தில் (Vel South Indian Kitchen) மேலாளராக பணியாற்றி வந்தார்.
அவருக்கு பிப்ரவரி 14-ஆம் திகதி இரவு ஒரு கார் மோதி, தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதே நாளில் உயிரிழந்தார்.
விக்னேஷ் தனது மனைவி ரம்யா உடன் 2022 டிசம்பரில் இந்தியாவில் இருந்து பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்தார்.
பிப்ரவரி 20 அன்று விக்னேஷின் கொலை தொடர்பாக, பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட ஷாஜிப் காளித் என்ற 25 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார்.
பிறகு அவர் Reading Crown நீதிமன்றத்தில் ஆஜரானார். தனது நண்பரான சுஹீம் ஹுசேன் மற்றும் தோழி மியா ரிலியை சாட்சியாக கொண்டு கொலை குற்றத்தை அவர் ஏற்றுக்கொண்டார்.
விக்னேஷ் மரணத்திற்கு தானே காரணம் என்று ஒப்புக்கொண்டார். ஆனால், அவர் கொலை செய்ய எண்ணவில்லை என்றும், அவரை அச்சுறுத்த மேட்டுமே முயற்சித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தற்போது தொடர்கின்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Tamil Man killed in UK, Pakistan origin, Indian Origin man killed by pakistani in uk, Vel South Indian Kitchen, South Indian restaurant in uk