ஐபிஎல்-லின் போது மின்விளக்குகளை ஹேக் செய்தோம்! கேலிக்குள்ளான பாகிஸ்தான் அமைச்சரின் பேச்சு
இந்தியா மீது "சைபர் தாக்குதல்" நடத்தியதாக பாகிஸ்தான் அமைச்சரின் பேச்சு சமூக வலைதளங்களில் கேலிக்கு உள்ளாகியுள்ளது.
சைபர் தாக்குதல்
பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமீபத்தில் பேசிய கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக கேலிக்குள்ளாக்கி வருகின்றன.
அதாவது, பாகிஸ்தானிய "சைபர் வீரர்கள்" இந்தியா மீது தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஆசிப் கூறியுள்ளார்.
குறிப்பாக, இந்த சைபர் படைகள் "ஐபிஎல் போட்டிகளின் போது மின்விளக்குகளை ஹேக் செய்து அணைத்ததுடன், இந்திய அணைக் கதவுகளையும் ஹேக் செய்து தண்ணீரை வெளியேற்றியுள்ளனர்" என்று அவர் குறிப்பிட்டார்.
சமூக வலைதளங்களில் கேலி!
இந்தக் கருத்துகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், வலைத்தளவாசிகள் மத்தியில் பல ஜோக்குகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகின.
பலர் அமைச்சரின் தொழில்நுட்ப மற்றும் அடிப்படை அறிவியல் புரிதலை கேள்விக்குள்ளாக்கினர். "மின்சார விளக்குகளை எப்படி 'ஹேக்' செய்ய முடியும்?" மற்றும் "அறிவியல் புரிதல் இல்லாமல் பேசுகிறாரா?" போன்ற கேள்விகள் பரவலாக முன்வைக்கப்பட்டன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |