இந்தியாவின் சட்டவிரோத முடிவு லட்சக்கணக்கான உயிர்களை பணயம் வைக்கிறது! பாகிஸ்தான் பிரதமர்
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் இந்தியாவின் முடிவு சட்ட விரோதமானது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
சிந்து நதிநீர் ஒப்பந்தம்
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் உண்டானது.
பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
மேலும், பயங்கரவாதத்தை ஆதரிப்பதை பாகிஸ்தான் நிறுத்தாதவரை தண்ணீர் வழங்க முடியாது என்றும் திட்டவட்டமாக அறிவித்தது.
ஆனால் பாகிஸ்தான் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், சர்வதேச மட்டத்தில் இந்த விவகாரத்தை எடுத்துச்சென்றுள்ளது.
ஷெபாஸ் ஷெரீப்
இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் (Shehbaz Sharif) தஜிகிஸ்தானின் தலைநகரில் நடந்து வரும் 'சர்வதேச பனிப்பாறை பாதுகாப்பு' மாநாட்டில் கலந்துகொண்டார்.
தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோமாலி ரஹ்மானை சந்தித்த அவர், பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார திட்டங்கள் குறித்து விவாதித்தார். மேலும் அவர் சிந்து நதிநீர் ஒப்பந்தம் குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், "சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் இந்தியாவின் தன்னிச்சையான மற்றும் சட்ட விரோத மிகவும் வருந்தத்தக்கது. குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக லட்சக்கணக்கான உயிர்களை பணயம் வைக்கக்கூடாது. பாகிஸ்தான் இதை அனுமதிக்காது. சிவப்புக்கோட்டை தாண்ட நாங்கள் அனுமதிக்கமாட்டோம்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |