அனுஷ்காவை ஏன் திருமணம் செய்தீர்கள்? கோலியை விமர்சித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்
இந்திய கிரிக்கெட் வீரர் விராட்கோலி திருமணம் செய்து கொண்டது குறித்து பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் சோயப் அக்தர் விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரை இழந்த பின்னர், தான் அணித்தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் விராட் கோலி.
கோலியின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் உலகுக்கே பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
இந்நிலையில் கோலியின் இந்த திடீர் முடிவுக்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
பாகிஸ்தானின் முன்னாள் வீரரான சோயப் அக்தர் கூறுகையில், நான் மட்டும் ஒரு இந்திய கிரிக்கெட் வீரராக இருந்திருந்தால் எனது விளையாட்டில் கவனம் செலுத்தியிருப்பேன்.
எனது தொழிலில் நான் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் திருமணம் செய்யாமல் இருந்திருப்பேன்.
கிரிக்கெட் உலகில் சாதித்த பின்னரே கோலி திருமணம் குறித்து யோசித்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், எது சரி தவறு என்று எனக்குத் தெரியவில்லை, அனைத்தும் முடிந்துவிட்டது, இனிமேல் இங்கிருந்து எப்படி முன்னேறுவது என்பது குறித்து தான் கோலி யோசிக்க வேண்டும்.
அவர் ஒரு Run Machine மீண்டும் பழைய வீரராக அவர் திரும்ப வருவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் கோலியை அணியில் இருந்து நீக்க கூடாது எனவும் அவர் தனது பழைய Form இல் உள்ளது போல் திரும்பவும் வந்து 120 ரன்களை அவருடைய மட்டையால் விளாச வேண்டும் எனவும் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.