மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய மிக மோசமான குண்டு வீச்சு... 400 கடந்த பலி எண்ணிக்கை
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், மருத்துவமனை ஒன்றின் மீது நடந்த வான்வழித் தாக்குதலில் பல நூறு பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் வரலாற்றிலேயே
வெளியான தகவலின் அடிப்படையில் 400 பேர்கள் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், ஆப்கானிஸ்தானின் வரலாற்றிலேயே மிக அதிக உயிர்ப்பலியை ஏற்படுத்திய சம்பவம் இதுவென்றும் கூறுகின்றனர்.

2021-ஆம் ஆண்டில் அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், காபூல் விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 169 ஆப்கான் பொதுமக்களும் 13 அமெரிக்கப் படைவீரர்களும் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, தற்போது பாகிஸ்தானின் குண்டு வீச்சில் பல நூறு பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆனால், மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றே பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காபூலிலும், கிழக்கு ஆப்கானிய மாகாணமான நங்கஹாரிலும் உள்ள இராணுவத் தளங்கள் மீதும், பயங்கரவாத ஆதரவு உள்கட்டமைப்பு என்று குறிப்பிட்டவற்றின் மீதும் தாக்குதல் நடத்தியதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஆப்கானிஸ்தான் அரசின் செய்தித்தொடர்பாளர்களில் ஒருவரான ஹம்துள்ளா ஃபித்ரத் தெரிவிக்கையில், உள்ளூர் நேரப்படி இரவு சுமார் 9 மணியளவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல், 2,000 படுக்கைகள் கொண்ட அந்த மருத்துவமனையின் பெரும் பகுதிகளைச் சேதப்படுத்தியது.
பாகிஸ்தான் தரப்பில் மறுப்பு
இதுவரை பலி எண்ணிக்கை 400 கடந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுமார் 250 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
போதை மருந்து சிகிச்சை முன்னெடுக்கப்படும் அந்த மருத்துவமனையில் சுமார் 2,000 பேர் சிகிச்சை பெற்று வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளார். மேலும், கொடுமைகளை இழைப்பதற்காக, மருத்துவமனைகளையும் பொதுமக்கள் இடங்களையும் பாகிஸ்தான் குறிவைப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

தாக்குதலில் உயிரிழந்தவர்களும் காயமடைந்தவர்களும் மருத்துவமனையின் நோயாளிகள் என்றும் அவர் கூறினார். இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபின் செய்தித் தொடர்பாளர் மொஷர்ரஃப் ஜைதி, காபூலில் எந்த மருத்துவமனையும் குறிவைக்கப்படவில்லை என்று கூறி, காபூலின் குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை என நிராகரித்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |