இந்தியர்கள் நாட்டிற்குள் நுழைய தடை! பிரபல அண்டை நாடு முக்கிய அறிவிப்பு
இந்தியர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதிப்பதாக அண்டை நாடான பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் தேசிய கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (NCOC), இந்தியாவில் இருந்து விமானம் அல்லது சாலை மார்க்கமாக வரும் பயணிகள் பாகிஸ்தானுக்குள் நுழைய இரண்டு வாரங்களுக்கு தடை விதித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் கண்டறியப்பட்ட ‘double mutant’ கொரோனா மாறுபாடு பாகிஸ்தானுக்குள் பரவாமல் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக NCOC தெரிவித்துள்ளது. ஷ
அதேசமயம் நாட்டில் கொரோனா தீவிரமடைந்து வருவதின் எதிரொலியாக பிரித்தானிய 'சிவப்பு பட்டியல்' இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,59,170 புதிய கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம் 1,761 இறப்புகள் பதிவாகியுள்ளன, இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 1,80,530 ஆக அதிகாரித்துள்ளது.