பாகிஸ்தானில் கனமழை, காற்றால் 8 குழந்தைகள் உட்பட 27 பேர் மரணம்
பிபர்ஜாய் சூறாவளி (Cyclone Biparjoy) நெருங்கி வருவதால் பாகிஸ்தானில் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக பாகிஸ்தானில் 8 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த 27 பேரில் 8 பேர் குழந்தைகள்
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்றில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த 27 பேரில் 8 பேர் குழந்தைகள் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனமழை காரணமாக 147 பேர் காயமடைந்துள்ளனர்.
சனிக்கிழமையன்று கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் புயல் பேரழிவை ஏற்படுத்தியது. நான்கு மாவட்டங்களில் அவசர நிலையை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
twentyfournews.com
ஐந்து உடன்பிறப்புகள்
பன்னு மாவட்டத்தில், 2 முதல் 11 வயதுடைய ஐந்து உடன்பிறப்புகள் உட்பட 15 பேர் இறந்தனர்.
200 கால்நடைகள் இறந்ததாக மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தைமூர் அலி கான் தெரிவித்தார்.
@sherryrehman/Twitter
மழையில் பல வீடுகள் சேதமடைந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன, மின்கம்பங்கள் சாய்ந்தன. தற்போதைய சூழ்நிலையில் மீட்பு பணி மிகவும் கடினமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் பிரதமர் இரங்கல்
இதனிடையே, புயலால் உயிரிழந்தவர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் (Shehbaz Sharif) இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Possible Impact of #BIPARJOY
— NDMA PAKISTAN (@ndmapk) June 11, 2023
Source: PDC Global
Link?https://t.co/TBWt0ziBw5 pic.twitter.com/mEKyctPLXR
கடந்த ஆண்டு, பருவமழை மற்றும் வெள்ளத்தால் நாட்டின் மூன்றில் ஒரு பகுதி தண்ணீரில் மூழ்கியது. அன்றைய தினம் 1700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். Biparjoy சூறாவளியைக் கருத்தில் கொண்டு கடலோரப் பகுதிகளில் இருந்து மக்கள் விலகி இருக்குமாறு பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.