பெட்ரோல் இல்லை, பணம் இல்லை.. அரசியல்வாதிகள் முடிவால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதா? பாகிஸ்தான் வீரர் கொந்தளிப்பு
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி தொடங்கியுள்ள நிலையில், அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் அரசியல்வாதிகளை கண்டித்து ட்வீட் செய்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் அந்நிய செலவாணி கையிருப்பு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பெட்ரோல் தட்டுப்பாடு, வங்கிகளில் இருந்து மக்கள் பணம் எடுக்க முடியாத நிலைமை என அந்நாடு தற்போது பொருளாதார நெருக்கடியை சந்திக்கிறது.
இந்த நிலையில்,பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஆரம்பித்துள்ளதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
No Petrol available in any petrol station in Lahore??? No cash available in ATM machines?? Why a common man have to suffer from political decisions. @ImranKhanPTI @CMShehbaz @MaryamNSharif @BBhuttoZardari
— Mohammad Hafeez (@MHafeez22) May 24, 2022
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'லாகூரில் எந்த பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் கிடைக்கிறது? எந்த ஏடிஎம் மையங்களிலும் பணம் இல்லையே?? அரசியல்வாதிகள் எடுக்கும் முடிவுகளால் சாமானியன் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? சொல்லுங்கள் இம்ரான் கான், ஷபாஸ், மரியம் ஷெரீப், பூட்டோசர்தாரி' என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையில் ஷபாஸ் ஷரீப் ஆட்சிக்கு எதிராக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பேரணி நடத்தி வருவதால் கலவரம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.