பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் திகதி நிர்ணயம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
பல மாதங்களாக தேர்தல் திகதிகள் முடங்கிய நிலையில், பாகிஸ்தானில் பிப்ரவரி 11-ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவிருப்பதாக தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பொது தேர்தல்
பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் இன்று தேர்தல் திகதி குறித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக அன்வார் உல் ஹக் கக்கர் ஆகஸ்ட் 14, 2023 அன்று பதவியேற்றதை அடுத்து இது வந்துள்ளது.
பாகிஸ்தானின் தேசிய சட்டமன்றம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று முன்னாள் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் உத்தரவுப்படி கலைக்கப்பட்டது.
அதன் பிறகு, பாகிஸ்தான் அரசியலமைப்பின் படி ஜனாதிபதி கலைக்கப்பட்ட 90 நாட்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, பாராளுமன்றத்தின் 336 இடங்களுக்கு தேர்தலை விரைவாக நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஆகவே உச்ச நீதிமன்றத்தில் தில் மனுவில், அந்நாட்டின் தேர்தல் ஆணைய வழக்கறிஞர், தேர்தல் திகதியை அறிவித்துள்ளார்.
இதன்படி, 2024 ஆம் வருடம் பிப்ரவரி 11 அன்று அந்நாட்டில் பாராளுமன்றத்திற்கான பொதுதேர்தல் நடைபெறும்.
மேலும், அந்நாட்டில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நடத்தும் தெஹ்ரிக்-ஏ-இன்ஸாஃப், முன்னாள் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் நடத்தும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக், முன்னாள் வெளளியுறவு துறை அமைச்சர் பிலவல் பூட்டோ ஜர்தாரி நடத்தும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை தேர்தல் களத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |