நாடு தழுவிய வெள்ள எச்சரிக்கை., பனிச்சரிவு அபாயம் அதிகரிப்பு
பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய அவசர எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
அடுத்த 12 முதல் 24 மணி நேரத்தில் கடும் மழை, இடியுடன் கூடிய மழை, நகரங்களில் வெள்ளம், பனிச்சரிவால் ஏரிகள் உடைந்து வெள்ளம் (Glacial Lake Outburst Floods) ஏற்படும் அபாயம் அதிகம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வடக்கு பகுதியான கில்கித்-பல்டிஸ்தான், ஹுன்சா, ஸ்கர்டு, கெய்பர் பக்துன்க்வா மாகாணம் ஆகியவை மிகுந்த அபாயத்தில் உள்ளதாக NDMA தெரிவித்துள்ளது.
தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி போன்ற நகரங்களிலும் வெள்ள அபாயம் உள்ளது.

வடக்கு பகுதிகளுக்கு தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் மூடப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியான கடுமையான பருவமழையை சந்தித்துள்ளது. 2025-இல் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2022-இல் ஏற்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளம் நாட்டின் மூன்றில் ஒரு பகுதியை வெள்ளக்காடாக மாற்றியது.

பாகிஸ்தான் உலகளவில் கார்பன் உமிழ்வில் 1 சதவீதத்திற்கும் குறைவாக பங்களித்தாலும், காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட 5 நாடுகளில் ஒன்றாக உள்ளது.
கில்கித்-பல்டிஸ்தானில் வெப்பநிலை 48.5 டிகிரி செல்ஸியஸ் வரை உயர்ந்ததால் பனிச்சரிவுகள் வேகமாக உருகி, 3,000-க்கும் மேற்பட்ட பனிச்சரிவு ஏரிகள் உருவாகியுள்ளன. இதில் 33 ஏரிகள் உடைந்து வெள்ளம் ஏற்படும் அபாயத்தில் உள்ளன.
2022 வெள்ளம் 1,700 உயிர்களை பறித்து, 30 மில்லியன் மக்களை இடம்பெயரச் செய்தது. 14.8 பில்லியன் டொலர் சொத்துக்கள் சேதமும், 15.2 பில்லியன் டொலர் GDP இழப்பும் ஏற்பட்டது. சர்வதேச நிதி உதவி குறைவாக இருப்பதால், பாகிஸ்தான் இன்னும் பெரிய அபாயத்தில் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |