ஒற்றை கையில் குர்ஆன்! மறு கையில் அணு ஆயுதம்! உதவிக்காக கையேந்தாதீர்கள்: பாகிஸ்தான் தலைவர் பகீர் கருத்து
பணத்திற்காக பிற நாடுகளிடம் பிச்சை எடுக்காதீர்கள், மாறாக அணுகுண்டுகளை வைத்து மிரட்டி பணத்தை கோருங்கள் என பாகிஸ்தான் அரசுக்கு அந்த நாட்டின் Tehreek-i-Labbaik Pakistan கட்சியின் தலைவர் சாத் ரிஸ்வி அறிவுரை வழங்கியுள்ளார்.
பாகிஸ்தான் கட்சி தலைவர் மிரட்டல்
பாகிஸ்தானின் Tehreek-i-Labbaik கட்சியின் சமீபத்திய பொது கூட்டத்தில் அதன் தலைவர் சாத் ரிஸ்வி பேசி இருக்கும் விஷயம் சர்ச்சையானதை தொடர்ந்து, அது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதில் பாகிஸ்தான் அரசாங்கம் பிற நாடுகளிடம் கையேந்துவதை நிறுத்தி விட்டு, அணு ஆயுதம் கொண்டு மிரட்டி பணத்தை கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Quran in one hand, N-Bomb in other to threaten the world, suggests Pak radical group Tehreek-e-Labaaik Ameer Hafiz Saad Hussain Rizvi
— Shalinder Wangu (@Wangu_News18) February 2, 2023
Criticizes Pak Govt and Army, says they are begging before other nations for aid, as Pak faces worst economy crisis@CNNnews18 pic.twitter.com/m3KBgEQO4b
பாகிஸ்தான் அரசாங்கம் அதன் பிரதமர், கேபினட் அமைச்சர்கள் மற்றும் இராணுவ தலைமை அதிகாரி ஆகியோரை பிற நாடுகளுக்கு அனுப்பி பொருளாதார உதவிகளை கேட்டு பிச்சை எடுக்கின்றனர்.
நான் எதற்காக இதை செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு? பாகிஸ்தானின் பொருளாதாரம் ஆபத்தான நிலையில் இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள்.
மாறாக, நான் அவர்களுக்கு அறிவுரை கூறினேன், ஒரு கையில் குர்ஆனை எடுத்துக் கொள்ளுங்கள், மற்றொரு கையில் அணு குண்டு உள்ள சூட்கேசை எடுத்து கொள்ளுங்கள், மொத்த கேபினட்-டும் ஸ்வீடன் சென்று, குர் ஆனை பாதுகாக்க வந்து இருப்பதாக கூறுங்கள். ஒட்டுமொத்த உலகமும் காலடியில் வீழவில்லை என்றால், என் பெயரை மாற்றிக் கொள்ளுங்கள் என்று பேசியுள்ளார்.
Reuters
குர்ஆன் எரிப்பு-க்கு எதிரான போராட்டம்
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்லாமில் உள்ள துருக்கி தூதரகம் முன்பு ஸ்வீடனின் ஸ்டேம் குர்ஸ் கட்சி தலைவர் ரஸ்முஸ் பலுடன், இஸ்லாமிய மதத்தினரின் புனித நூலான குர் ஆனை தீ வைத்து எரித்தார்.
இதற்கு கண்டம் தெரிவிக்கும் விதமாக நடைபெற்ற பொது கூட்டத்தில் சாத் ரிஸ்வி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார், அத்துடன் இதனை பாகிஸ்தான் அரசாங்கம் மிகவும் சாதரணமாக எடுத்து கொண்டதாகவும், குர்ஆனை எரித்தவர்களுக்கு வலுவான பாடம் புகட்ட வில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.