பாகிஸ்தானில் உச்சம் தொட்ட காற்று மாசுபாடு: பள்ளிகள், அலுவலகங்கள் மூடல்
காற்று மாசு காரணமாக பாகிஸ்தான் லாகூர் நகரில் உள்ள அனைத்து பள்ளிகள், அலுவலகங்கள், பூங்காக்கள் அடைக்கப்பட்டுள்ளன.
காற்று மாசுபாடு
பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான லாகூரில் காற்று மாசுபாடு காரணமாக அனைத்து பள்ளிகள், அலுவலகங்கள், பூங்காக்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளன.
லாகூர் நகரம் தான் பாகிஸ்தானின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரம் என்பதால் காற்றின் தர குறியீட்டெண் 400க்கு மேல் அதிகரித்தது.
இதனால் லாகூர் நகரில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், மால்கள், அலுவலகங்கள், பூங்காக்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குஜ்ரன்வாலா, ஹபிசாபாத் மற்றும் லாகூர் ஆகிய 3 நகரங்களில் சுற்றுச்சூழல் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பஞ்சாப் மாகாண பகுதியின் பொது இடங்களில் 4 பேருக்கு மேல் கூடுவதற்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |