200 கோடி தெற்காசிய மக்களின் தலைவிதியை வடிவமைக்க..பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் தலைவர்கள் வாழ்த்து
இந்திய பிரதமராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மூன்றாவது முறையாக பிரதமர்
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. நரேந்திர மோடி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.
மேலும் அமைச்சர்களாக பொறுப்பேற்றவர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாகிஸ்தானின் அரசியல் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நவாஸ் ஷெரிஃப் வாழ்த்து
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் (Nawaz Sharif) தனது வாழ்த்து பதிவில், ''மூன்றாவது முறையாக பதவி ஏற்கும் நரேந்திர மோடி ஜிக்கு எனது அன்பான வாழ்த்துக்கள். சமீபத்திய தேர்தல்களில் உங்கள் கட்சியின் வெற்றி, உங்கள் தலைமையின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. வெறுப்பை நம்பிக்கையுடன் மாற்றுவோம் மற்றும் தெற்காசியாவின் இரண்டு பில்லியன் மக்களின் தலைவிதியை வடிவமைப்பதற்கான வாய்ப்பைப் பெறுவோம்'' என தெரிவித்துளளார்.
My warm felicitations to Modi Ji (@narendramodi) on assuming office for the third time. Your party's success in recent elections reflects the confidence of the people in your leadership. Let us replace hate with hope and seize the oppurtunity to shape the destiny of the two…
— Nawaz Sharif (@NawazSharifMNS) June 10, 2024
அதேபோல் ''இந்திய பிரதமராக உறுதிமொழி எடுத்துக் கொண்ட நரேந்திரமோடிக்கு எனது வாழ்த்துக்கள்'' என பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் (Shehbaz Sharif) வாழ்த்து கூறியுள்ளார்.
Thank you @cmshehbaz for your good wishes. https://t.co/ynBdjxHJmZ
— Narendra Modi (@narendramodi) June 10, 2024
ஷெபாஸ் ஷெரீப்பின் வாழ்த்திற்கு நரேந்திர மோடி எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |