இந்தியாவிற்கு எதிராக இராணுவத் தாக்குதலைத் தொடங்கியதாக பாகிஸ்தான் அறிவிப்பு

Pakistan Jammu And Kashmir Operation Sindoor
By Arbin May 10, 2025 03:23 AM GMT
Report

சனிக்கிழமை அதிகாலை முதல் இந்தியா மீது இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

விமானப்படை தளங்கள் மீது

வட இந்தியாவில் ஏவுகணை சேமிப்பு தளம் உட்பட பல தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்டை நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களில் மிக மோசமான சண்டையை தற்போது நீட்டித்துள்ளது.

இந்தியாவிற்கு எதிராக இராணுவத் தாக்குதலைத் தொடங்கியதாக பாகிஸ்தான் அறிவிப்பு | Pakistan Military Offensive Against India

முன்னதாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அருகில் உள்ள மூன்று விமானப்படை தளங்கள் மீது இந்தியா ஏவுகணைகளை வீசியதாக தகவல் வெளியான சிறிது நேரத்திலேயே பாகிஸ்தானின் தாக்குதல் தொடங்கியது, ஆனால் பாகிஸ்தான் வான் பாதுகாப்பு இந்திய ஏவுகணைகளை இடைமறித்தது என்றே கூறப்படுகிறது.

காஷ்மீர் தொடர்பான நீண்டகால சர்ச்சையில் சிக்கியுள்ள இரு நாடுகளும், புதன்கிழமை முதல் பாகிஸ்தானுக்குள் இந்தியா தீவிரவாத தளங்கள் என்று அழைக்கப்படும் இடங்களில் தாக்குதல் நடத்தியதிலிருந்து தினசரி மோதல்களில் ஈடுபட்டுள்ளன.

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி

பாகிஸ்தான் தரப்பும் பதிலடி அளித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் மேற்கு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமானப்படை தளம் மற்றும் இந்திய காஷ்மீரில் உள்ள உதம்பூர் விமானப்படை தளமும் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் இந்தியாவின் BrahMos ஏவுகணை சேமிப்பு தளம் மீதும் பாகிஸ்தான் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பில் இந்திய இராணுவம் மிக விரைவில் ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு எதிராக இராணுவத் தாக்குதலைத் தொடங்கியதாக பாகிஸ்தான் அறிவிப்பு | Pakistan Military Offensive Against India

பாகிஸ்தானில் அமைந்துள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்தியா முன்னெடுத்த அதிரடி தாக்குதல் நடவடிக்கை இந்தியா சிந்தூர் என பெயர் சூட்டிய நிலையில், எதிர் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் ”ஆபரேஷன் பன்யானுன் மர்சூஸ்” என பெயரிட்டுள்ளது.

பழிவாங்கும் விதமாக

இந்த வார்த்தை குர்ஆனிலிருந்து எடுக்கப்பட்டது, அதாவது உறுதியான, ஒன்றுபட்ட அமைப்பு என்பது இதன் பொருள். இதனிடையே, இந்தியாவின் ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில் வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், அங்கு சைரன்கள் ஒலித்ததாகவும் சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் நேரில் பார்வையிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்கு எதிராக இராணுவத் தாக்குதலைத் தொடங்கியதாக பாகிஸ்தான் அறிவிப்பு | Pakistan Military Offensive Against India

இந்தியா தனது விமானங்கள் மூலம், வான்வழி ஏவுகணைகளை ஏவியது... நூர் கான் தளம், முரீத் தளம் மற்றும் ஷோர்கோட் தளம் ஆகியவை இலக்கு வைக்கப்பட்டுள்ளன என்று பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

விமானப்படை தளங்களில் ஒன்று தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு வெளியே உள்ள ராவல்பிண்டியின் காரிஸன் நகரத்தில் உள்ளது, மற்ற இரண்டும் இந்தியாவின் எல்லையை ஒட்டிய பாகிஸ்தானின் கிழக்கு மாகாணமான பஞ்சாபில் உள்ளன.

எதிரிகளால் பேரிழப்பு.... சர்வதேச நாடுகளிடம் நிதியுதவி கோரிய பாகிஸ்தான்

எதிரிகளால் பேரிழப்பு.... சர்வதேச நாடுகளிடம் நிதியுதவி கோரிய பாகிஸ்தான்

கடந்த மாதம் காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களுக்கு தொடக்கமாக புதன்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இதனிடையே, இரு நாடுகளும் முன்னெடுத்துள்ள தாக்குதல்களில், புதன்கிழமை முதல் குறைந்தது 48 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் அவை இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

இந்தியாவிற்கு எதிராக இராணுவத் தாக்குதலைத் தொடங்கியதாக பாகிஸ்தான் அறிவிப்பு | Pakistan Military Offensive Against India

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US