இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயார்! பாகிஸ்தான் அமைச்சர் பகிரங்க மிரட்டல்
சிந்து நதி நீரை நிறுத்தினால், இந்தியா முழு அளவிலான போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல் விடுத்துள்ளார்.
பதற்றம்
காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலால் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வரும் நிலையில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்தும் விலகியுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவை தாக்குவதற்கு அணு ஆயுதங்கள் தயாராக இருப்பதாக பாகிஸ்தானின் அமைச்சர் ஹனீப் அப்பாஸி (Hanif Abbasi) தெரிவித்துள்ளார்.
பாலிஸ்டிக் ஏவுகணைகள்
அவர் கூறுகையில், "சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி, பாகிஸ்தானின் நீர் விநியோகத்தை நிறுத்த இந்தியா துணிந்தால், முழு அளவிலான போருக்கு தயாராக இருக்க வேண்டும்.
எங்களிடம் உள்ள இராணுவ உபகரணங்கள், ஏவுகணைகள் காட்சிக்கு இல்லை. நாடு முழுவதும் அணு ஆயுதங்களை எங்கு வைத்துள்ளோம் என்பது யாருக்கும் தெரியாது. நான் மீண்டும் கூறுகிறேன். இந்த பாலிஸ்டிக் ஏவுகணைகள், அவை அனைத்தும் உங்களை (இந்தியாவை) குறி வைக்கின்றன" என மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும் அவர் Ghori, Shaheen மற்றும் Ghaznavi ஏவுகணைகள் மற்றும் 130 அணு ஆயுதங்கள் உட்பட பாகிஸ்தானின் ஆயுதக் கிடங்கு "இந்தியாவிற்காக மட்டுமே" வைக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |