பாகிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்ட சம்பவம்: 129 பேரை கைது செய்த பொலிஸார்
பாகிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் வீடுகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் 129 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிறிஸ்தவ தேவாலயங்கள், வீடுகள் மீது தாக்குதல்
பாகிஸ்தானின் பைசலாபாத் மாவட்டத்தில் ஜரன்வாலா நகரை சேர்ந்த ராஜா அமிர் என்ற கிறிஸ்தவர், இஸ்லாமிய மத நூலான குரானின் சில பக்கங்களை கிழித்தெறிந்ததாக வெளியான தகவலை தொடர்ந்து அந்த நகரில் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டு தலங்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் வீடுகளை குறி வைத்து இஸ்லாமிய கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது.
இதில் 4 தேவாலயங்கள், 12 வீடுகள் சேதப்படுத்தப்பட்டதுடன், ஒரு தேவாலயம் முற்றிலுமாக தீ வைத்து கொளுத்தப்பட்டது என தகவல் வெளியாகி இருந்தது.
PAKISTAN
— Catholic Arena (@CatholicArena) August 17, 2023
- Muslims remove cross from yet another church
- They are burning and desecrating bibles
- They are torturing Christians pic.twitter.com/Hsj6pTaMXR
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் வசித்து வந்த கிறிஸ்தவர்கள் மிகுந்த அச்சமடைந்து இருப்பதாக கண்ணீர் விட்டு கதறினர்.மேலும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியாத நிலையில் இருப்பதாகவும் வேதனை தெரிவித்து இருந்தனர்.
129 பேர் கைது
இந்நிலையில் முஸ்லிம் குருமார்கள் மற்றும் பொலிஸார்கள் வன்முறை ஏற்பட்ட பகுதிக்கு சென்றதை தொடர்ந்து அங்கு அமைதி திரும்பியுள்ளது.
பாகிஸ்தானின் புதிய இடைக்கால பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்வாருல் உல்ஹக் காதரின் உத்தரவின் பெயரில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக களமிறங்கினர்.
அந்த வகையில் கிறிஸ்தவர்களின் தேவாலயங்கள், வீடுகள் ஆகியவற்றை சேதப்படுத்த சம்பவத்தில் ஈடுபட்ட 129 முஸ்லிம்களை பாகிஸ்தான் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |