கடும் நிதி நெருக்கடி... பல மில்லியன் டொலர் ஆயுதங்களை உக்ரைனுக்கு விற்ற ஆசிய நாடு
நிதி நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கடந்த ஆண்டு ஆயுத ஒப்பந்தத்தின் மூலம் 364 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனுக்கான ஆயுத விநியோகம்
இரண்டு தனியார் அமெரிக்க நிறுவனங்களுடனான இந்த ஒப்பந்தமானது, உக்ரைனுக்கான ஆயுத விநியோகம் என்றே கூறப்படுகிறது.
@afp
பிரித்தானிய ராணுவத்தின் சரக்கு விமானம் ஒன்று பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களுடன் சைப்ரஸில் உள்ள பிரித்தானிய ராணுவ தளத்திற்கு பயணித்துள்ளதாகவும், அங்கிருந்து ருமேனியாவுக்கு ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் உக்ரைனுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யவில்லை எனவும், அண்டை நாடான ருமேனியாவுக்கு ஆயுதம் ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
இரண்டு அமெரிக்க நிறுவனங்களுடன் 155mm shells விற்பனைக்கு பாகிஸ்தான் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதேவேளை 2022 ஆகஸ்டு 17ம் திகதி 155mm shells உக்ரைன் கொள்முதல் செய்துள்ளதை தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.
ஆயுத ஏற்றுமதியானது 3,000 சதவீதம்
மேலும், இரு அமெரிக்க நிறுவனங்களுக்கும் என மொத்தமாக 364 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஆயுத ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த ஒப்பந்தமானது 2023 அக்டோபர் மாதத்துடன் காலாவதியானதாகவும் கூறப்படுகிறது.
@afp
மட்டுமின்றி, 2022 மற்றும் 2023ல் பாகிஸ்தானின் ஆயுத ஏற்றுமதியானது 3,000 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2021 மற்றும் 2022ல் வெறும் 13 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஆயுத ஏற்றுமதி செய்துகொண்ட பாகிஸ்தான், 2022 மற்றும் 2023ல் 415 மில்லியன் டொலருக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |