பிறந்த நாள் வீடியோவை பகிர்ந்த சிறிது நேரத்தில் இன்ஸ்டாகிராம் பிரபலம் சுட்டுக்கொலை
பாகிஸ்தானை சேர்ந்த 17 வயது இன்ஸ்டாகிராம் பிரபலம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வசித்து வரும் 17 வயதான சானா யூசுப், இன்ஸ்டாகிராம் பிரபலமாக அறியப்படுகிறார். இவரை இன்ஸ்டாகிராம் தளத்தில், 5 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.
சமூக ஆர்வலரின் மகளான இவர், தனது வீடியோக்கள் மூலம் பெண் உரிமை, கல்வி விழிப்புணர்வு குறித்து பேசி வந்தார்.
இன்ஸ்டாகிராம் பிரபலம் சுட்டுக்கொலை
இந்நிலையில் நேற்று இரவு அவரது வீட்டிற்கு வந்த நபர், அவருடன் பேசிக்கொண்டிருக்கும் போதே துப்பாக்கியை எடுத்து சானா யூசுப்பை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே சானா யூசுப் உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு (PIMS) கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சனா தனது 17வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் தருணங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சில மணி நேரத்தில், அவருக்கு இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், குற்றவாளியை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தில் கௌரவ கொலைக்கான சாத்தியக்கூறு இருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
முன்னதாக கடந்த குவெட்டாவில் ஹிரா என்ற 15 வயது சிறுமி, டிக்டோக்கில் வீடியோக்களை வெளியிட்டதற்காக அவரது தந்தை மற்றும் தாய் மாமாவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |