தங்கையை பல மாதங்கள் சீரழித்து கொன்ற சிறுவன்! கொடூர சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் பின்னணி
பாகிஸ்தானில் நங்கனா சாஹிப் மாவட்டத்தில் 14 வயது சிறுவன் சிறுவன் தனது 7 வயது தங்கையை பலமுறை துஷ்பிரயோகம் செய்து, மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் கழுத்தை நெரித்துக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.
பாரா கர் காவல் நிலையத்தில் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகாரில் தொடங்கிய இந்த சம்பவம் பின்னர் கற்பழிப்பு மற்றும் கொலை வழக்காக மாறியுள்ளது.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, தொழிலாளி ஒருவர் பொலிஸை அணுகி, தனது 7 வயது மகளை காணவில்லை என்று புகார் கொடுத்தார். இந்த வழக்கை விசாரிக்க பச்சிக்கி இன்ச்சார்ஜ் பொலிஸ் பதவியில் இருந்த அஞ்சும் ரிஸ்வான் சீமாவிடம் ஒப்படைக்கப்பட்ட்டது.
சீமாவும் அவரது குழுவினரும் 7 வயது சிறுமியை தேடும் பணியை மேற்கொண்டனர், ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்த நாள், கிராமத்திற்கு அருகிலுள்ள வயலில் பொலிஸார் சிறுமியை சடலமாக கண்டெடுத்தனர்.
அச்சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதும் அதற்கு முன்னர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் பொலிஸார் கண்டுபிடித்தனர்.
இந்த சம்பவம் குறித்து எச்சரிக்கப்பட்ட பின்னர், மூத்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று ஆதாரங்களை சேகரித்தனர். குற்றவாலியைத் தேடும் போது, 150-க்கும் மேற்பட்டவர்களை பிடித்து, அவர்களின் டி.என்.ஏ மாதிரிகளை பொலிஸார் சேகரித்தனர்.
அப்போது, சிறுமியின் 14 வயது சகோதரனின் டி.என்.ஏ மாதிரி பொருந்தியது. பின்னர் சிறுவனை விசாரித்தபோது குற்றத்தை ஒப்புக்கொண்டான். அவன் கொடுத்த வாக்குமூலம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விசாரணையின் போது, சிறுவன் தனது சகோதரியை கழுத்தை நெரித்து கொலை செய்வதற்கு முன்பு பல மாதங்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒப்புக்கொண்டான். மேலும், அவன் விலங்குகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் ஒப்புக்கொண்டான்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் குழந்தைகளை கண்காணித்து வளர்க்கவேண்டும் என பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.