பெண்ணின் ஆடைகளை கிழித்து, அந்தரத்தில் தூக்கிப் போட்ட பயங்கரம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
பாகிஸ்தானில் பெண்ணின் ஆடைகளை கிழித்து அந்தரத்தில் தூக்கி போட்ட சம்பத்தின் வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 14-ஆம் திகதி பாகிஸ்தானில் சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், அதே நாளில் தலைநகர் லாகூரில் அமைந்துள்ள Minar-e-Pakistan என்ற தேசிய நினைவுச் சின்னத்தில் பெண் டிக் டாக் பிரபலம், நண்பர்களுடன் அங்கு படப்பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, திடீரென்று அங்கு சுமார் 400-க்கும் மேற்பட்ட ஆண்கள் ஒன்றாக கூறி, அந்த பெண்ணை மானபங்கம் படுத்தினர்.
இது குறித்து வெளியாகியுள்ள வீடியோவில், அவரின் உடைகளை கிழித்து, அவரை அந்தரத்தில் தூக்கிப் போட்டு கொடுமை செய்துள்ளனர். அப்போது அருகில் இருக்கும் மக்கள் காப்பாற்ற முயன்றும், அவர்களை அதை மீறி கொடூர செயலை செய்துள்ளனர்.
இது ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது.
பெயர் கூற விரும்பாத அந்த பெண் டிக் டாக் வீடியோக்கள் மூலமாக பாகிஸ்தானில் பிரபலமானவர் என்று கூறப்படுகிறது
அன்றைய தினம் தனது நண்பர்கள் சிலருடன் Minar-e-Pakistan-ல் வீடியோ ஒன்றை அப்பெண் படமாக்கிக் கொண்டிருந்த போது திடீரென 400-க்கும் மேற்பட்ட கும்பல் அந்த பெண்ணை கட்டிப்பிடித்து அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளனர்.
அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அப்பெண்ணையும், அவரது நண்பர்களின் உடமைகளை திருடியதுடன், ஆடைகளை கிழித்தும் அட்டகாசம் செய்துள்ளனர்.
டிக் டாக் பிரபலமான அப்பெண்ணின் ஆடைகளை கிழித்து, அவரை பல முறை அந்தரத்தில் தூக்கிப் போட்டுள்ளனர்.
இதனால் அப்பெண் உதவிக்காக கதறி அழுதுள்ளார். இருப்பினும் அந்த கும்பல் விடாமல் அவரை கொடுமைப்படுத்தியதுடன், அந்த கும்பலைச் சேர்ந்த நபர் அவருடைய தங்க ஆபரணங்களையும், மொபைல் போனையும் திருடிச் சென்றுவிட்டதாக அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.