மதம் மாற மறுப்பு: பாகிஸ்தானில் இரண்டு குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த கொடூரம்
பாகிஸ்தானில் இஸ்லாமியரை திருமணம் செய்ய மறுத்த கிறிஸ்தவ பெண் கொடூரமாக கொல்லப்பட்டார்.
சித்திரவதை செய்யப்பட்டு பெண் கொலை
40 வயதான ஷாஜியா இம்ரான் எனும் அப்பெண், முஸ்லிமான மணி குஜ்ஜரை திருமணம் செய்ய மறுத்ததால் நான்கு பேரால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
பெண்ணின் தொண்டை அறுக்கப்பட்டு, ஆசிட் ஊற்றி உடல் சிதைக்கப்பட்டது.
உயிரிழந்த ஷாஜியா இம்ரான் பதினாறு, ஏழு மற்றும் ஆறு வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாவார்.
Twitter
சடலமாக மீட்கப்பட்டார்
ஷாஜியா லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தில் பகல்நேர பராமரிப்பு மையத்தில் பணிபுரிந்தார். ஜூன் 6-ஆம் திகதி ஷாஜியா வேலை முடிந்து வீடு திரும்பவில்லை. இதையடுத்து, குடும்பத்தினர் பொலிஸில் புகார் அளித்தனர்.
பின்னர் அவர் சடலமாகவே மீட்கப்பட்டார். உள்ளூர் சுவிசேஷ தேவாலயத்தின் உறுப்பினரான ஜாபர் மசிஹ், தடயவியல் சோதனைகளில் பெண் கொல்லப்படுவதற்கு முன்பு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் காட்டியது என்றார்.
குஜ்ஜார் தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாக ஷாஜியா முன்பு தனது மைத்துனரிடம் கூறியிருந்தார். இந்த விசாரணையில் சந்தேக நபர் கண்டுபிடிக்கப்பட்டார்.
நான்கு பேர் செய்த கொடூரம்
நான்கு குற்றவாளிகளில் ஒருவரை மட்டுமே பொலிஸார் இதுவரை கைது செய்துள்ளனர். குற்றச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சகோதரர் மற்றும் உறவினர்கள் இருவர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.
ஷாஜியாவின் கணவரும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் கொல்லப்பட்டார். அவர் ஒரு விபத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். தாய கொல்லப்பட்டதால் ஏழு மற்றும் ஆறு வயது குழந்தைகள் அதிர்ச்சியில் உள்ளனர். அவர்கள் வயதான பாட்டியால் பராமரிக்கப்படுவதாக ஜாபர் மசிஹ் கூறினார்.
இந்த சம்பவம் நடந்த ஒரு மாதமான நிலையில் இறுதிணைகளுக்கு முன்பே வெளியுலகத்திற்கு தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |