அமெரிக்காவில் தாக்குதலுக்கு திட்டமிட்ட ஆசிய நாட்டவர் கனடாவில் இருந்து நாடுகடத்தப்பட்டார்
நியூயார்க் நகரில் யூதர்கள் மீது தாக்குதல் நடத்த சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, பாகிஸ்தானியர் ஒருவர் கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார்.
துப்பாக்கிச் சூடு நடத்த
ஷாஜீப் ஜாதூன் என்றும் அழைக்கப்படும் 20 வயதான முகமது ஷாஜீப் கான், செப்டம்பர் மாதம் கனடாவில் கைது செய்யப்பட்டார்.
அவர் மீதான குற்றவியல் புகாரின் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டு இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின் அக்டோபர் 7 ஆம் திகதி நினைவு நாளில், புரூக்ளினில் உள்ள ஒரு யூத மையத்தில் ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவாக ஒரு கூட்ட துப்பாக்கிச் சூடு நடத்த கான் நியூயார்க் செல்ல திட்டமிட்டிருந்தார்.
யூத சமூகத்தைச் சேர்ந்த முடிந்தவரை பலரைக் கொல்ல தானியங்கி ஆயுதங்களைப் பயன்படுத்த அவர் திட்டமிட்டார், அனைத்தும் ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவாகவே என அமெரிக்க சட்டத்தரணி ஜே கிளேட்டன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க-கனடா எல்லையிலிருந்து சுமார் 12 மைல் (19 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள ஓர்ம்ஸ்டவுன் நகராட்சியில் கனேடிய அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.
ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்கு பொருள் ஆதரவு மற்றும் வளங்களை வழங்க முயற்சித்ததாகவும், பயங்கரவாதச் செயல்களைச் செய்ய முயன்றதாகவும் கான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |