லண்டனில் பாலஸ்தீன நாட்டின் அதிகாரப்பூர்வ தூதரகம் திறப்பு
பாலஸ்தீன நாட்டிற்கான அதிகாரப்பூர்வ தூதரகம் லண்டன் நகரில் திறக்கப்பட்டுள்ளது.
தனி நாடு அங்கீகாரம்
இஸ்ரேல் - காசா இடையிலான போர் நடவடிக்கை தீவரமாக நடைபெற்ற போது பாலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பது தொடர்பாக பல்வேறு நாடுகள் முக்கிய முடிவை அறிவித்தன.
அந்த வரிசையில் கடந்த செப்டம்பர் மாதம் பிரித்தானிய அரசு பாலஸ்தீனத்தை தனி நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.

இதன் அடுத்த கட்ட நகர்வாக பாலஸ்தீன நாட்டிற்கான அதிகாரப்பூர்வ தூதரகம் லண்டன் நகரில் திறக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீன தூதரகம்
திங்கட்கிழமை மேற்கு லண்டனில் உள்ள ஹேமர்ஸ்மித் பகுதியில் பாலஸ்தீன நாட்டிற்கான தனி தூதரகம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.
திறப்பு விழாவில் பேசிய பாலஸ்தீன நாட்டிற்கான தூதர் ஹூசாம் சோம்லோட், இந்த தருணம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. நூற்றாண்டுகளுக்கு மேலாக தன்னாட்சி உரிமை கோரி வரும் தங்கள் நாட்டு மக்களுக்கு கிடைத்துள்ள மரியாதையான அங்கீகாரமாகும்.

பாலஸ்தீனியர்கள் காசா, கிழக்கு ஜெருசலேம் மற்றும் வெஸ்ட் பேங்க் என எங்கிருந்தாலும் அவர்களின் அடையாளத்தை அழிக்க முடியாது என்பதற்கான சிறந்த சான்று இந்த தூதரகம் என்று தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |