இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்: எங்களுக்கு ஆயுதம் வழங்கி உதவுவது இந்த நாடு தான்! வெளிவந்த முக்கிய தகவல்
ஈரான் ஆயுதம் வழங்கி உதவுவதற்கு நன்றி என்று இசுதீன் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைதா பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.
பிணைக் கைதிகள்
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலிய படைகளும் இடையே தீவிரமான சண்டை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் காசாவில் 100 க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து இருப்பதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
BREAKING:
— Visegrád 24 (@visegrad24) October 8, 2023
Hamas announces that they have more than 100 hostages in Gaza and that many of them are foreign nationals kidnapped at the music festival pic.twitter.com/bS2zRazljI
அதில் பெரும்பாலானோர் இஸ்ரேல்-காசா எல்லையில் நடைபெற்ற இசை திருவிழாவில் கலந்து கொண்ட வெளிநாட்டினர் என ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் வெளிவந்த மற்றொரு தகவலில், ஹமாஸ் அமைப்பினர் கிட்டத்தட்ட 130 இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஈரானுக்கு நன்றி
இந்நிலையில் இசுதீன் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைதா பேசும் வீடியோ ஒன்றில், எங்களுக்கு ஆயுதம், பணம், மற்றும் பல உபகரணங்களை தந்து உதவும் ஈரானுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
Spokesperson of Izzuddin Al-Qassam Brigades, Abu Obaidah:
— Visegrád 24 (@visegrad24) October 8, 2023
“We thank the Iran for providing us with weapons, money and other equipment! They gave us missiles to destroy Zionist fortresses, and helped us with anti-tank missiles!” pic.twitter.com/0aEkqUh3kN
மேலும் சியோனிஸ்ட்(Zionist) கோட்டைகளை தகர்த்தெறிய அவர்கள் எங்களுக்கு ஏவுகணைகளை தந்துள்ளனர்.
அத்துடன் அவர்கள் தொட்டி எதிர்ப்பு ஏவுகணைகளையும் தந்து உதவியுள்ளனர் என இசுதீன் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளிவந்த வீடியோவின் நம்பத்தன்மை எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |