இது எங்களை காப்பாற்றாது! வெறுத்துப்போன பாலஸ்தீனிய செய்தியாளர்..கதறி அழுத பெண் வாசிப்பாளர்
பாலஸ்தீனப் பத்திரிகையாளர் ஒருவர் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதை அறிந்து பெண் செய்தி வாசிப்பாளர் கதறி அழுத வீடியோ காண்போரை கலங்க வைத்தது.
பாலஸ்தீனிய தொலைக்காட்சி நிருபர்
தெற்கு காசாவில் பாலஸ்தீனிய தொலைக்காட்சி நிருபர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
முகமது அபு ஹத்தாப் எனும் அந்த நிருபர், இதுதொடர்பான செய்தியை நாஸர் மருத்துவமனைக்கு வெளியே நின்று நேரலையில் வழங்கினார்.
“We are waiting for our turn, one after the other.”
— Al Jazeera English (@AJEnglish) November 3, 2023
A Palestinian journalist from Gaza ripped off his protective gear during a live report after one of his colleagues was killed in an Israeli attack. pic.twitter.com/6SgOg0vkg6
அதனைத் தொடர்ந்து வீடு திரும்பிய அவர் கொல்லப்பட்டார். அவரது மரணம் மற்றும் அவரின் குடும்பத்தாரின் மரணத்தை செய்தி நிறுவனமான WAFA அறிவித்தது.
கதறி அழுத செய்தி வாசிப்பாளர்
இதுதொடர்பான செய்தியை பாலஸ்தீன செய்தியாளர் சல்மான் அல் பஷீர் வழங்கும்போது உணர்ச்சிகரமான On-Air அறிக்கையை வெளியிட்டார்.
அப்போது அவர் இந்த பாதுகாப்பு உடைகள் எதுவுமே எங்களை காப்பாற்றாது எனக் கூறி தான் அணிந்திருந்த கவச உடைகளை கழற்றி கீழே வீசினார்.
அதனை செய்தி அறையில் இருந்து பார்த்த பெண் வாசிப்பாளர் உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுதார். இதுதொடர்பான வீடியோ காண்போரின் மனதை உருக்கும் வகையில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |