இஸ்ரேலின் கொலைவெறி தாக்குதல்... 700 கடந்த பாலஸ்தீன் சிறார்களின் பலி எண்ணிக்கை
இறுகும் இஸ்ரேல் - ஹமாஸ் போரினால் இதுவரை பாலஸ்தீன மக்கள் 2,215 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதில் சிறார்களின் எண்ணிக்கை மட்டும் 724 என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஓங்கும் இஸ்ரேலின் கை
கடந்த 7 நாட்களாக இஸ்ரேல் - ஹமாஸ் போர் உக்கிரமாக நடந்து வருகிறது. இதில் தற்போது இஸ்ரேலின் கை ஓங்கியிருப்பதாகவே கூறப்படுகிறது. நேற்று காஸா நகருக்குள் நுழைந்த இஸ்ரேலிய ராணுவம், பணயக்கைதிகளை தீவிரமாக தேடியுள்ளது.
பல எண்ணிக்கையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கையானது 2,215 எனவும் காயங்களுடன் தப்பியவர்கள் 8.714 எனவும் காஸா பகுதியில் உள்ள சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
குடிநீர் விநியோகம் மொத்தமாக முடங்கியுள்ள நிலையில், காஸா பகுதியில் சுமார் 2 மில்லியன் மக்கள் கடும் அவதிக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அமைப்பு ஒன்று வெளியிட்ட தகவலில்,
@reuters
இஸ்ரேலிய அரசாங்கம் முற்றுகையிடப்பட்ட பகுதிக்கான தண்ணீர், உணவு மற்றும் எரிபொருள் ஆகியவற்றை நிறுத்தியுள்ளதாக உறுதி செய்துள்ளது.
அடுத்த கட்டத்திற்கு தயாராகுங்கள்
இதனிடையே, வெளிநாட்டு குடியுரிமையை வைத்திருக்கும் காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் ரஃபா எல்லைக் கடந்து செல்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர்களின் தூதரகங்களிலிருந்து மின்னஞ்சல் தகவல்களைப் பெற்றனர்.
@reuters
ஆனால், ரஃபா எல்லைக்கு சென்ற பின்னர், ஏற்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, காஸா நகருக்கு வெளியே முகாமிட்டிருந்த இஸ்ரேல் வீரர்களை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சந்தித்துள்ளார்.
அவர்களிடம் அடுத்த கட்டத்திற்கு தயாராகுங்கள் என மட்டும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், சாலைகள் பாதுகாப்பானதாக இல்லை என குறிப்பிட்டுள்ள ஹமாஸ் படைகள், மக்களை பாதுகாப்பான இடங்களில் பதுங்க கோரிக்கை வைத்துள்ளனர்.
@reuters
மேலும், கார் மற்றும் லொறிகளில் தெற்கு நோக்கி புறப்படும் பாலஸ்தீன மக்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக ஹமாஸ் சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் அப்பாவி மக்கள் வெளியேறுவதை ஹமாஸ் தடுப்பதாகவும், அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருவதாகவும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதற்கு ஹமாஸ் மறுப்பு தெரிவித்துள்ளதுடன், சாலைகளில் அப்பாவி மக்கள் மீது குண்டு பொழிந்த இஸ்ரேல் திட்டமிட்டு, மக்களை சாலைக்கு வரவழைத்து படுகொலை செய்வதாக குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |