இஸ்ரேல் மீது வீசப்பட்ட 160க்கும் மேற்பட்ட ஏவுகணைகள்: தாக்குதல் காட்சிகள்!
பாலஸ்தீனிய இஸ்லாமிய போராளிகள் நேற்று இரவு இஸ்ரேலிய நகரங்கள் மீது 160க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் போராளிக் குழுவிற்கு எதிராக சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் அரசாங்கம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
அந்தவகையில் காசா பகுதியில் உள்ள கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஜிஹாத் போராளிக் குழுவின் தளபதிகளில் ஒருவர் கொல்லப்பட்டார்.
The #Palestinian resistance launched about 100 missiles targeting #Zionist colonies enclaving #Gaza, Asqalan, #TelAviv, Beit Yam and other colonies in the middle section of occupied historic #Palestine. Again, their Iron Dome failed to stop the majority of these missiles. pic.twitter.com/8NouCq0gTt
— tim anderson (@timand2037) August 5, 2022
மேலும் இந்த தாக்குதலில் குறைந்தது நான்கு ஜிஹாத் போராளிகள் மற்றும் குழந்தை உட்பட ஒன்பது பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், இத்துடன் 79 பேர் காயமடைந்தனர் என்றும் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் நடத்திய சோதனையில் 19 ஜிஹாத் போராளிகள் கைது செய்ததாகவும் அறிவித்தது.
இந்தநிலையில், பாலஸ்தீனிய ஜிஹாத் போராளிகள் நேற்று இரவு இஸ்ரேலிய நகரங்கள் மீது குறைந்தது 160க்கும் மேற்பட்ட ராக்கெட் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
Overnight, the #Palestinian Islamic Jihad fired more than 160 rockets into #Israel from the #Gaza Strip.
— NEXTA (@nexta_tv) August 6, 2022
The Jerusalem Post reports that 130 of them entered the territory of Israel, but most of them intercepted. pic.twitter.com/9v1SmKzBZ4
இவை இஸ்ரேலின் வணிக மையமான டெல் அவிவ் நோக்கி ஏவப்பட்டதாகவும், அவற்றில் பெருபாலான ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: புதிய கட்டத்திற்கு நுழையும் உக்ரைன் போர்: பிரித்தானிய உளவுத்துறை அதிர்ச்சி தகவல்!
இந்த தாக்குதலில் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு ஓடும் போது சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது என்று இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.