எந்த அறிகுறியும் இல்லை! கொரோனா வைரஸ் குறித்து WHO எச்சரிக்கை
கொரோனா வைரஸ் தொற்றுநோய் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் எச்சரித்துள்ளார்.
புதிதாக பரவி வரும் ஓமிக்ரான் மாறுபாட்டின் வீரியம் குறைவாக இருக்கிறது மற்றும் வைரஸால் ஏற்படும் அச்சுறுத்தலை நீக்கியுள்ளது என்ற அனுமானத்திற்கு எதிராக WHO தலைவர் Tedros Adhanom Ghebreyesus எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
ஓமிக்ரான் மாறுபாடு கடந்த வாரத்தில் உலகம் முழுவதும் 18 மில்லியன் புதிய நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுத்தது.
மேலும் இந்த மாறுபாடு சராசரியாக குறைவான தீவிரத்தன்மை கொண்டதாக நிரூபிக்கப்பட்டாலும், இது ஒரு லேசான நோய் என்ற கருத்து தவறாக வழிநடத்துகிறது.
உலகளவில் ஓமிக்ரான் தீவிரமாக பரவிவருவதால், புதிய மாறுபாடுகள் உருவாக வாய்ப்புள்ளது என்று Tedros Adhanom எச்சரித்திருக்கிறார்.
அதனால் தான் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு முக்கியமானதாக இருக்கிறது என்று Tedros Adhanom கூறியுள்ளார்.