அவரை தூக்கிடுங்க! இல்லேன்னா ரன்களை விளாசுவாரு... பாகிஸ்தான் அணியை வீழ்த்த இந்தியாவுக்கு பிரபல வீரர் தந்த டிப்ஸ்
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு பிரபல வீரர் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் வரும் 24ஆம் திகதி நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை தொடர்களில் இதுவரை இந்திய அணியை ஒருமுறை கூட பாகிஸ்தான் அணி வென்றதில்லை இதனால் இந்த முறையாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது.
இந்நிலையில் இந்திய அணி எப்படி விளையாடினால் சிறப்பாக இருக்கும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்த வேண்டும் என்றால் நிச்சயம் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாமை தொடக்கத்திலேயே வீழ்த்த வேண்டும்.
ஏனெனில் பாபர் அசாம் பேட்டிங்கில் நிலைத்து விட்டால் ரன்கள் ஏராளமாக வந்துவிடும். அதேபோன்று சாஹீன் அப்ரிடி இடதுகை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் இந்திய ஓப்பனர்கள் கே.எல்.ராகுல், விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வலதுகை வீரர்களுக்கு தொடக்கத்திலேயே சிரமத்தை கொடுப்பார்.
எனவே குறைந்த ரன்களுக்குள் பாகிஸ்தானை சுருட்டிவிட்டால் சாஹின் அஃப்ரிடி ஓவரில் அழுத்தம் இருக்காது. அதற்கு பாபர் அசாம் விக்கெட்டை விரைவில் வீழ்த்தினாலே போதும்.
தற்போது உள்ள நிலைமையில் பாகிஸ்தான் அணியை விட இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக இருந்தாலும் பாகிஸ்தான் அணி மிகச் சிறப்பாகவே விளையாடி வருகிறது என கூறியுள்ளார்.