நடுவானில் ஒருவர் மீது ஒருவர் மோதியபடி கடலுக்குள் விழுந்த 3 பெண்கள்! நடந்தது என்ன? பதைபதைக்கும் வீடியோ
துருக்கியில் பாராகிளைடிங் செய்தவர்கள் வானத்தில் ஒருவரோடு ஒருவர் மோதி கடலில் விழுந்த அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளது.
Oludeniz நகர ரெசாட்டில் நடந்த 21வது சர்வதேச வான்வெளி விளையாட்டு விழாவில் கலந்து கொண்டவர்கள் பாராகிளைடிங் செய்தனர்.
நடுவானில் பறந்து கொண்டு இருந்தவர்கள் எதிர்பாராதவிதமாக ஒருவரோடு ஒருவர் மோதி நிலைகுலைந்தனர். முதலில் Cagdas Turkmen (42) என்பவர் Ibrahim Kars (40) மற்றும் Murat Can Sak (25) மீது மோதியதில் மூவரும் கீழே விழுந்தனர்.
மூவரும் தங்கள் பாராசூட்கள் சிக்கியதால் சுமார் 20 மீட்டர் உயரத்தில் இருந்து கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அவர்களை கடற்படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். திடீர் விபத்தில் 3 பேர் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து நாட்கள் நடக்கும் இந்த விழா கடந்த அக்டோபர் 20ல் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.