மகள் பள்ளிக்குச் சென்றிருந்த நேரத்தில் நாடுகடத்தப்பட்ட பெற்றோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி

Crime
By Balamanuvelan May 18, 2023 08:04 AM GMT
Report

 சிறுமி ஒருத்தி பள்ளிக்குச் சென்றிருந்த நேரத்தில், அவளுடைய பெற்றோர் நாடுகடத்தப்பட்டதைக் குறித்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளியிலிருந்து வீடு திரும்பிய சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி

லெபனான் நாட்டில் வாழும் சிறுமியான Raghad, பள்ளியிலிருந்து வீடு திரும்பியபோது, வீடு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தாள்.

பெற்றோரையும் உடன் பிறந்தவர்களையும் காணாமல் பயந்து நடுநடுங்கி வாய் விட்டு அழத்துவங்கினாள் Raghad.

Raghad அழுதுகொண்டிருப்பதைக் கண்ட பக்கத்துவீட்டுப் பெண் ஒருவர், அவளுடைய அத்தையை தொலைபேசியில் அழைத்து விடயத்தைக் கூற, பதறியடித்துக்கொண்டு ஓடோடி வந்த அந்தப் பெண், Raghadஐ தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மகள் பள்ளிக்குச் சென்றிருந்த நேரத்தில் நாடுகடத்தப்பட்ட பெற்றோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி | Parents Deported When Daughter Went To School

 நடந்தது என்ன?

Raghadஇன் பெற்றோர் சிரியா நாட்டவர்கள். சிரியா நாட்டிலிருந்து அகதிகளாக வந்தவர்களான அவர்களுடைய ஆவணங்கள் காலாவதியாகிவிட்டிருக்கின்றன.

ஒரு நாள் காலை 9.00 மணியளவில் அவர்களுடைய வீட்டுக் கதவைத் தட்டிய லெபனான் இராணுவத்தினர், முக்கியமானவை என கருதப்படும் சில பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு உடனே புறப்படுமாறு அவர்களிடம் கூற, தங்கள் மகள் Raghad பள்ளி சென்றுள்ளதாகவும், தயவுகூர்ந்து அவள் வரும்வரை தங்களை வீட்டிலிருக்க அனுமதிக்குமாறும் Raghadஇன் பெற்றோர் இராணுவத்தினரிடம் மன்றாடியுள்ளார்கள்.

மகள் பள்ளிக்குச் சென்றிருந்த நேரத்தில் நாடுகடத்தப்பட்ட பெற்றோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி | Parents Deported When Daughter Went To School

ஆனால், அவர்களுடைய கெஞ்சலை ஏற்றுக்கொள்ளாத இராணுவத்தினர், அவர்களைக் கைது செய்துள்ளார்கள். பின்னர், அவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளார்கள், மகளிடம் கூட விடைபெற்றுக்கொள்ளாமலே.

Raghad லெபனான் நாட்டில் பிறந்தவள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிரிய அகதிகளை திருப்பி அனுப்பும் லெபனான்

உலகிலேயே அதிக அளவில் சிரிய புலம்பெயர்ந்தோரை ஏற்றுக்கொண்ட நாடு லெபனான் தான் (அதன் மக்கள்தொகையை ஒப்பிடும்போது).

ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் லெபனானில் சிரியர்களுக்கெதிரான அலை ஒன்று பரவிவருகிறது. சிரியர்கள் தங்கள் வளங்களுக்கும் சேவைகளுக்கும் போட்டியாக வந்துள்ளதாக லெபனான் மக்கள் கருதுகிறார்கள்.

மகள் பள்ளிக்குச் சென்றிருந்த நேரத்தில் நாடுகடத்தப்பட்ட பெற்றோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி | Parents Deported When Daughter Went To School

அத்துடன், வன்முறைகளின் பின்னணியில் சிரியர்கள் இருப்பதாக குற்றம் சாட்டப்படுவதுடன், லெபனான் நாட்டவர்களை விட சிரியா நாட்டவர்களுக்கு அதிக குழந்தைகள் பிறப்பதால், அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதால், லெபனான் நாட்டின் மக்கள் தொகை சமநிலை பாதிக்கப்படுவதாக லெபனானியர்கள் கருதுகிறார்கள்.

ஆகவே, ஆரம்பத்தில் சிரியர்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், இப்போது அதையும் தாண்டி சிரியர்களை அவர்களுடைய நாட்டுக்கே திருப்பி அனுப்பவேண்டும் என்ற எண்ணம் உருவாகிவிட்டது.

மகள் பள்ளிக்குச் சென்றிருந்த நேரத்தில் நாடுகடத்தப்பட்ட பெற்றோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி | Parents Deported When Daughter Went To School

அதன் விளைவாகத்தான் இப்போது Raghad தன் பெற்றோரைப் பிரிந்து வாழ்கிறாள். அவளுக்கோ தன் குடும்பத்துடன் இணைய ஆசை. ஆனால், அவர்களோ மீண்டும் சிரியாவுக்கு அவளை அழைத்து வருவதை விரும்பவில்லை.

எப்படியாவது மீண்டும் லெபனானுக்கு வர அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், இப்போதைய சூழலில் அது அவ்வளவு எளிதல்ல!  

10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US