பாரீஸ் மேயர் தேர்தல்: பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ள முடிவுகள்
பாரீஸ் மேயர் தேர்தல், பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஏமாற்றத்தை அளித்துள்ள முடிவுகள்
பிரான்சில், சுமார் 35,000 மேயர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் நடைபெற்றுவருகின்றன.

பிரான்சைப் பொருத்தவரை, மேயர் தேர்தல் என்பது, வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுகிறது என்பதை பலரும் அறிந்திருக்கக்கூடும்.
ஆக, மேயர் தேர்தல்களில் அதிக வெற்றிகளைப் பெறும் கட்சியைச் சார்ந்த ஒருவர் அடுத்த ஜனாதிபதியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே, பிரான்ஸ் கலாச்சாரத்துறை அமைச்சரான ரச்சிதா டதி (Rachida Dati), பாரீஸ் மேயர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக, தனது அமைச்சர் பதவியையே ராஜினாமா செய்தார்.

ஆனால், ரச்சிதா தேர்தலில் தோல்வியடைந்துவிட்டார்.
அதேபோல, மக்களில் ஒரு தரப்பினரிடையே பிரபலமாகிவரும் புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான National Rally (RN) கட்சியும், பாரீஸ் மேயர் தேர்தலில் வெற்றிபெற இயலவில்லை!

மாறாக, சோஷியலிஸ்ட் கட்சி வேட்பாளரான இமானுவல் கிரேக்வார் (48) என்பவர், பாரீஸ் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆக, வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்காக வைத்து தேர்தலில் போட்டியிட்ட ரச்சிதாவுக்கும், புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சிக்கும் பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |