பாரிஸ் ஒலிம்பிக் 2024ல் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: வெண்கலம் வென்றார் மனு பாக்கர்!
பாரிஸ் ஒலிம்பிக் 2024 ல் துப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாக்கர் இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்றுள்ளார்.
2024 பாரிஸ் ஒலிம்பிக்-கின் இரண்டாவது நாளில் Chatearoux துப்பாக்கி சுடும் மையத்தில் நடைபெற்ற 10 மீ ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர்(Manu Bhaker ) வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.
🇮🇳🥉 𝗕𝗥𝗢𝗡𝗭𝗘 𝗕𝗥𝗜𝗟𝗟𝗜𝗔𝗡𝗖𝗘! Manu Bhaker wins India's first medal at #Paris2024 and what a way to do so! From heartbreak at Tokyo to winning a Bronze at Paris, Manu Bhaker's redemption story has been wonderful to witness.
— India at Paris 2024 Olympics (@sportwalkmedia) July 28, 2024
🔫 A superb effort from her and here's hoping… pic.twitter.com/O7tqOuGFTa
இது பாரிஸ் ஒலிம்பிக் 2024 ல் இந்தியாவுக்கான முதல் பதக்கம் ஆகும்.
மேலும், இதன் மூலம் ஒலிம்பிக்கின் துப்பாக்கி சுடுதல் பிரிவில் பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையையும் மனு பாக்கர் பெற்றுள்ளார்.
இதற்கிடையில் ஆடவர் மற்றும் பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் இறுதிப் போட்டிக்கு அர்ஜுன் பாபுதா மற்றும் ரமிதா ஜிண்டால் ஆகியோர் தகுதி பெற்று இந்தியாவின் பதக்க கனவை உயர்த்தியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |