நாவூறும் சுவையில் ஆந்திரா பருப்பு பொடி.., எப்படி செய்வது?
பருப்பு பொடி ஆந்திராவில் மிகவும் பிரபலமானது.
இந்த பருப்பு பொடியை சூடான சாதத்துடன் பிணைந்த சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் ஆந்திரா பருப்பு பொடி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- துவரம் பருப்பு- ½ கப்
- பாசி பருப்பு- ½ கப்
- கடலை பருப்பு- ½ கப்
- பொட்டுக்கடலை- ½ கப்
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- சீரகம்- ½ ஸ்பூன்
- மிளகு- ½ ஸ்பூன்
- புளி- சிறிய துண்டு
- காய்ந்த மிளகாய்- 7
- கறிவேப்பிலை- 1 கொத்து
- பெருங்காயம்- ½ ஸ்பூன்
- உப்பு- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் துவரம் பருப்பு, பாசி பருப்பு, கடலை பருப்பு, பொட்டுக்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அதே வாணலில் எண்ணெய் சேர்த்து அதில் சீரகம், மிளகு, புளி, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுத்து ஆறவைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்து ஆறவைத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து பின் அதில் பெருங்காயம், உப்பு சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அவ்வளவுதான் இந்த சுவையான பருப்பு பொடியை சூடான சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிடலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |