புறப்பட தயாரான பயணிகள் விமானம்... ஓடுதளத்தில் நேர்ந்த பகீர் சம்பவம்
திபெத் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகிச் சென்ற நிலையில் திடீரென்று தீப்பிடித்தத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீன விமான நிலையத்தில் வியாழக்கிழமை குறித்த பகீர் சம்பவம் நடந்துள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டதாக விமான சேவை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சம்பவத்தின் போது 113 பயணிகள் மற்றும் 9 ஊழியர்களுடன் சீனாவின் Chongqing பகுதியில் இருந்து திபெத்தின் Nyingchi நகருக்கு அந்த விமானம் புறப்பட தயாராகியுள்ளது.
இந்த நிலையில், விமானத்திஒல் கொளாறு இருப்பதை கண்டறிந்த ஊழியர்கள் புறப்படும் நடவடிக்கையை ஒத்திவைத்துள்ளனர். ஆனால், விமானமானது கட்டுப்பாட்டை இழந்து, ஓடுபாதையை விட்டு விலகிச் சென்ற நிலையில் திடீரென்று தீப்பிடித்துள்ளது.
According to reports, at about 8:00 on May 12, a Tibet Airlines flight deviates from the runway and caught fire when it took off at Chongqing Jiangbei International Airport.#chongqing #airplane crash #fire pic.twitter.com/re3OeavOTA
— BST2022 (@baoshitie1) May 12, 2022
விமானத்தின் இறக்கை பகுதியில் தீ பிடிக்க, அதிர்ச்சியில் உறைந்த பயணிகள் உடனடியாக சம்பவ பகுதியில் இருந்து அவசர அவசரமாக வெளியேறியுள்ளனர். இதில் சிலருக்கு லேசான காயமேற்பட்டுள்ளதாகவும், அவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் நிர்வாகிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
குன்மிங்கில் இருந்து குவாங்சோவுக்குச் சென்ற சீனா ஈஸ்டர்ன் விமானம் ஒன்று மார்ச் மாதம் 29,000 அடி உயரத்தில் இருந்து மலைப்பகுதியில் குத்திட்டு விழுந்ததில் அதில் இருந்த 132 பயணிகளும் மரணமடைந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
சீனாவில் கடந்த 30 ஆண்டுகளில் பதிவான மிகக் கொடூரமான விபத்து அதுவென கூறப்படும் நிலையில், அந்த விபத்துக்கான காரணம் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.